மதுரை காமராஜர் சாலையில் ‘மதுரா மெடிக்கல் சென்டர்’ என்ற மருந்தகம் இயங்கி வருகிறது. இதன் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை ஒப்புகை சீட்டு இன்றி அல்ப்பிரசோலம் (Alprazolam) என்ற நரம்பியல் நோய்க்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதுகுறித்த தேவைகளின் பேரில் தெப்பக்குளம் போலீசார் மற்றும் மருந்து ஆய்வாளர் குழு நேரில் ஆய்வு நடத்தினர். அப்போது, கடையில் இருந்த குறிப்பிட்ட மாத்திரைகளை பறிமுதல் செய்ததோடு கடை உரிமையாளர் தங்கராஜை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தொடர்ந்து இந்த மருந்துக்கடையில் மருந்து விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கடை அடைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மருந்துக்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி கடைக்கு சீல் வைப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…