Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குழந்தையை மாடியிலிருந்து வீசி கொன்ற தாய்..! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்..!

Muthu Kumar August 06, 2022 & 09:50 [IST]
குழந்தையை மாடியிலிருந்து வீசி கொன்ற தாய்..! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்..!Representative Image.

கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூரில் உள்ள எஸ்.ஆர் நகரில் பெண் பல் மருத்துவர் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இத்தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகள் முன் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், குழந்தை வளர வளர குழந்தைக்கு செவி கேட்கும் திறன் இல்லாததோடு, பேச்சு திறனும் இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் தீவிர மன உளைச்சலுக்கு உள்ளான குழந்தையின் தாய், தான் வசிக்கும் குடியிருப்பு கட்டிடத்தின் 4வது மாடிக்கு சென்று அங்கிருந்து தனது 4 வயது மகளை கீழே வீசியுள்ளார். 

இதனையடுத்து, தானும் குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது அக்கம் பக்கத்தினர் அவரை தடுத்துள்ளனர். இந்த விபத்தில் குழந்தை இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தாயின் மனநலம் குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்