Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

போதை மாத்திரை விற்ற 5 பேர் ஆயுதங்களுடன் கைது; மதுரையில் பரபரப்பு! 

KANIMOZHI Updated:
போதை மாத்திரை விற்ற 5 பேர் ஆயுதங்களுடன் கைது; மதுரையில் பரபரப்பு! Representative Image.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா வளையங்குளம் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை மற்றும் பெருங்குடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது வளையங்குளம் மும்மூர்த்தி கோவில் அருகே போலீசார் ரோந்து சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த ஐந்து மர்ம நபர்கள் தப்பி ஓடினர் .அதனை கண்ட போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்ததில் போதை மாத்திரை மற்றும் பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது.

 

தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் விசாரணை செய்ததில் மதுரையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன், லட்சுமனன், லிங்கப்பெருமாள் மற்றும்  சேதுபதி என்ற அஜித்குமார் என்பதும் அவ்வழியாக வருபவரிடம் வழிப்பறி செய்வதற்காகவும், போதை மாத்திரை விற்பனை செய்வதாகவும் ஆயுதங்கள் வைத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

எனவே ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 580 போதை மாத்திரை மற்றும் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்