Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் கைது; கடலூரில் பரபரப்பு! 

KANIMOZHI Updated:
கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் கைது; கடலூரில் பரபரப்பு! Representative Image.

திட்டக்குடி அருகே கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக்கு வீடு எடுத்து அதில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் இவர் போலி மருத்துவர் என்ற தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்ததன் பேரில் அங்கு திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அவரது வீட்டில் ஏராளமாக மருந்து மாத்திரைகள் பதுக்கி வைத்து சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது இதனை அடுத்து ராமநத்தம் போலீசார் சுரேஷ்  மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் சிறையில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெளியில் வந்த சுரேஷ் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி   வயது -32 என்ற  பெண்ணிற்கு கருகலைப்பு செய்ததில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனை அடுத்து  ராமநத்தம் போலீசார் போலி மருத்துவர் சுரேஷ் கைது செய்தனர் திட்டக்குடி  மற்றும் வேப்பூர் பகுதிகளில் தொடர்ந்து போலி மருத்துவர்கள் அதிகரித்து வருவதும் சட்டவிரோதமாக கருகலைப்பு செய்து பெண்கள் உயிரிழப்பதும் தொடர்கதை ஆகி உள்ளதால் அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை வைக்கின்றனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்