நவி மும்பையில் உள்ள ஒரு சாலையில் குடிபோதையில் இருந்த ஒரு பெண் வண்டி ஓட்டுநர் மற்றும் போலீஸ் அதிகாரியிடம் மிகவும் தகாத முறையில் நடந்துகொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
மார்ச் 25 அன்று அடையாளம் தெரியாத பெண் தனது 2 நண்பர்களுடன் மும்பையில் நள்ளிரவு விருந்தில் கலந்து கொண்டு வண்டியில் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
கிடைத்த தகவல்களின்படி, குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் பெண்களில் ஒருவர் பயணத்தின் போது வண்டி ஓட்டுநரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றுள்ளார். மேலும் டிரைவரை ஒதுக்கித் தள்ளி காரை தான் ஒட்டவும் முயற்சி செய்துள்ளார்.
இந்த கலாட்டாவை கண்டு போலீசார் வந்தவுடன், அவர் ஒரு அதிகாரியின் காலரைப் பிடித்து மிரட்டியுள்ளார்.
கேப் டிரைவர் மற்றும் அங்கு கூடியிருந்த மக்களால் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து தற்போது வெளிச்சத்திற்கு வந்தது.
ஒரு வீடியோவில், அவர் கேப் டிரைவர் மற்றும் மும்பை காவல்துறையை திட்டுவதை பார்க்க முடிகிறது. மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று வண்டி ஓட்டுநர் மற்றும் காவல்துறை எச்சரித்த பிறகும் அந்தப் பெண் அடங்காமல் அடாவடி செய்துள்ளார்.
மற்றொரு வீடியோவில், காவல்துறை மற்றும் ஊடகங்களை அழைத்தாலும் தன்னை எதுவும் செய்ய முடியாது என்று அவர் தற்பெருமை பேசுவதையும் கேட்க முடிகிறது.
இதையடுத்து குடிபோதையில் பொது சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக அவர் மற்றும் உடன் வந்தவர்கள் என 3 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் பழையது என்றாலும், இந்த வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…