தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, சென்னையில் அதிமுக மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த நிகழ்ச்சியின் மேடையில் பழனிசாமி பங்கேற்றுள்ள நிலையில், பன்னீர்செல்வம் மற்றொரு அறையில் உள்ளார். அவர் தனியாக சந்தித்து ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இவை நேற்று முன்தினம் சென்னை வருகை தந்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார். இந்நிலையில், திரவுபதி முர்மு மதியம் புதுச்சேரி வந்தார். அவரை முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் அவர்களிடம் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கோரினார்.
பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்த திரவுபதி முர்முவை பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் வரவேற்றனர். தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மாலை பாஜக - அதிமுக - பாமக- தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
அவரை அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மேடையில், திரவுபதியுடன் பழனிசாமியுடன் இதர முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் பாஜக எம்.எல்.ஏ.கள் அமர்ந்திருந்தனர்.
விழாவில் பேசிய பழனிச்சாமி பழங்குடியின பெண்ணை முதல்வர் ஸ்டாலின் ஆதரிக்கவில்லை. திரவுபதியை ஆதரிக்காமல் சமூக நீதி என பேசி மக்களை ஸ்டாலின் ஏமாற்றுகிறார். கடந்த 2012 தேர்தலில் திமுக காங்கிரஸ் சூழ்ச்சியால் சங்மா வெற்றி பெற முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார். மேலும் ஓ.பன்னிர்செல்வம் மேடைக்கு வராமல் தனி அறையில் தங்கியிருந்தார். அவருக்கு தனியாக ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…