குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி குன்னூர் மற்றும் கோத்தகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. மண் சரிவு ஏற்பட்டு கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது.
இதனால் குன்னூர்
மேட்டுப்பாளையம் சாலையில் 5 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.பாதுகாப்பு கருதி குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதே போல்
அம்பிகாபுரம், டிடிகே சாலை,
இந்திரா நகர், வண்டிச் சோலை உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் இன்று குன்னூர் மற்றும் கோத்தகிரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…