Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னை புரட்டி போட்ட மாண்டஸ் புயல்; முறிந்து விழுந்த மரங்கள் மட்டும் இத்தனையா? 

Kanimozhi Updated:
சென்னை புரட்டி போட்ட மாண்டஸ் புயல்; முறிந்து விழுந்த மரங்கள் மட்டும் இத்தனையா? Representative Image.

மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் 350க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மான்டஸ் புயல் எதிரொலியாக வட மாவட்டங்களில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்து வந்தது அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில் மாமல்லபுரம் அருகே மண்டேஸ் புயல் கரை கடந்தது அப்போது மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்திற்கு புயல் காற்று வீசியது இதில் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மரங்கள் வேருடன் சாய்ந்தன சென்னை அண்ணா சாலை ஜெமினி பாலம் அருகே மரம் வேருடன் சாய்ந்தது.

இதே போல தியாகராய நகர் திருமலைப்பிள்ளை சாலையில் மரம் வேருடன் சாய்ந்தது மேற்கு சைதாப்பேட்டை சீனிவாசா திரையரங்கம் அருகே மரம் நின்று கொண்டு இருந்த ஆட்டோ மீது விழுந்தது அதில் ஆட்டோ பலத்தை சேதம் அடைந்தது புயல் காற்றின் போது சென்னையில் பல்வேறு இடங்களில் 300 முதல் 350 மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்துள்ளதாகவும், 65க்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளதாகவும்  விழுந்ததாக மாநகராட்சி அதிகாரிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் பேடி, முறிந்த மரங்களை அகற்றும் பணியில் காலை முதல் 30,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் அனைத்தும் அகற்றப்படும் எனத் தெரிவித்தார். 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்