டெல்லி போக்குவரத்து கழகத்தின் சார்பில் தயாரிக்கப்படும் 1500 மின்சார பேருந்துகளுக்கான டெண்டரை டாடா மோட்டார்ஸ் பெற்றறுள்ளது.
டெல்லியில் முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், 1500 மின்சார பேருந்துகளை வழங்குவதற்கான டெண்டரை டெல்லி அரசு வெளியிட்டது. இந்த டெண்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் தலைமையாக வைத்து செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு நகரங்களுக்கு 650க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை வழங்கியுள்ளtஹு. இந்நிலையில் டெல்லிக்கு மேலும் 1500 மின்சார பேருந்துகளை வழங்க உள்ளது.
மேலும், மின்சார மருந்துகளை பயன்படுத்துவதால் டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…