உத்திரபிரதேசத்தில் தனக்கு அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளரை பழிவாங்கும் விதமாக மின் ஊழியர் செய்த காரியம் அனைவரின் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பரேலி அருகே தலைக்கவசம் அணியாமல் சென்ற பகவான் ஸ்வரூப் என்ற மின்வாரிய ஊழியருக்கு காவல் உதவி ஆய்வாளர் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து அந்த காவல் உதவியாளர் பணியாற்றும் குறிப்பிட்ட காவல் நிலையத்தின் மின் இணைப்பை துண்டித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய ஸ்வரூப் “காவல் நிலையம் மின்சார மீட்டர் இல்லாமல் மின் இணைப்பை பயன்படுத்தி வருகிறது, வேறு விதமாக கூறவேண்டும் என்றால் மின்சாரத்தை திருடுகிறது, மின்வாரிய ஊழியர்களிடம் கலந்தாலோசித்து விட்டு, அதன்பின்னரே மின்சாரத்தை துண்டித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தியதில், சட்டவிரோதமாக மின்இணைப்பு பெறப்பட்டதாகவும், அதற்கு உரிய அபராதத்தை செலுத்துமாறு மின்வாரியம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…