Erode latest news : ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள அத்தியூர் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை ஆண் யானை ஒன்று வெளியேறியது.
ஊருக்குள் உலா வரும் யானை
இந்நிலையில், அத்தியூர் கிராமத்துக்குள் வந்த யானை அங்குள்ள தோட்டத்துக்குள் புகுந்து மக்காச்சோள பயிரை சேதபடுத்திக் கொண்டு இருந்தது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறை
தகவல் அறிந்து விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்பு யானை ஊருக்குள் வந்தால் அதை யாரும் துன்புருத்தாமல் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கும் படி அறிவுறுத்தினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…