Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பதவியேற்ற பின் தொண்டர்களை சந்திக்கும் ஈ.பி.எஸ்...!

Muthu Kumar July 26, 2022 & 16:00 [IST]
பதவியேற்ற பின் தொண்டர்களை சந்திக்கும் ஈ.பி.எஸ்...!Representative Image.

தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என்றும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, அதிமுக வினர் திங்கட்கிழமை தமிழகத்தில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், சென்னையில் நாளை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மின் கட்டண உயர்வை கண்டித்து காலை 10 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதனையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவியேற்ற பின் முதன் முதலாக எடப்பாடி பழனிசாமி, அதிமுக தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் அதிமுக தொண்டர்கள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்