நேற்றைய தினம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ளது. அதில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த வாரம் வரை கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தைக் கடந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் புதிதாக 1712 பேருக்கு தொற்று பதிவாகிருந்த நிலையில் நேற்று அது சற்று குறைந்து 1,624 ஆக குறைந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 41 ஆயிரத்து 231 ஆக அதிகரித்துள்ளது. நல்வாய்ப்பாக கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதால் இந்தத் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 32 ஆகவே உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 2,004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34லட்சத்து 89 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 13,510 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…