சென்னை: நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய இஎஸ்ஐ மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான சென்னை, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். 17மணி நேர சோதனைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், அதிகாரிகள் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று இடங்களில் அடைப்பு உள்ளதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். இதை தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவர்களும் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து ஆய்வு செய்தனர். அதில் அவருக்கு மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…