தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து நேரடியாக பள்ளி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனையடுத்து சமீபத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னதாகவே கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தி வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்கள் அனைவரும் கட்டாய தேர்ச்சி என்பது நடைமுறையில் இருந்துவந்த நிலையில் 9ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.
10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் முடிந்து தற்போது அவர்களின் வினா தாள்கள் திருத்தும் பனி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தமிழகத்தில் அணைத்து 9வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்துள்ளது. மேலும் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி என அறிவித்துள்ளது, தேர்வு எழுதாத மாணவர்கள் பள்ளிக்கு சென்று சிறப்பு தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…