இந்தியாவில் வரும் ஆகஸ்டு 15ம் தேதி 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடியை Common DP ஆக வைக்குமாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மாதம்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் உரையாற்றுகிறார். அதன்படி, இந்த மாதத்திற்க்கான மன் கீ பாத் நிகழ்ச்சியில் இன்று மக்களுடன் பிரதமர் மோடி பேசினார்.
இந்நிலையில், மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா பெரும் வெற்றியடைந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்புகள் இன்னும் பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனையடுத்து. இந்தியாவின் சுதந்திர கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாளான ஆகஸ்டு 2 முதல் ஆகஸ்டு 15 சுதந்திர தினம் வரை இந்திய மக்கள் அணைவரும் வாட்ஸப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் முகப்பு புகைப்படமாக சுதந்திர கொடியை வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…