இந்தியாவில் உள்ள வங்கக்கடலில் உருவாகிய சூறாவளி சுழற்சி காரணமாக தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கேரளாவில் புதன்கிழமை வரை கனமழை பெய்யும் எனவும் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது.
அதன்படி, கேரள மாநிலத்தில், பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆற்றங்கரைகள், கடலோரப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…