மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் இளைஞர்கள் போராட்டம்நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுவரை 12 ரயிலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, இரண்டுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். வட மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் போராட்டங்கள் தொட ஆரமித்துள்ளது, சென்னையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும் மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாத வண்ணம் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் 150 போலீசார் என மொத்தம் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அக்னிபாத் காணப்படும் 4 ஆண்டுகள் மட்டும் ராணுவத்தில் பணியாற்றும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதை அளித்துள்ளது. 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு அந்த பணியில் இருந்து அவர் விடுவிக்கப்படுவார், மேலும் அவருக்கு ஓய்வூதியம் என்பது கிடையாது எனவே இந்த திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
சென்னையில், போர் நினைவு சின்னம் அருகே 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பாதுகாப்புப்படியினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் விழுப்புரம் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப்பாதை போலீசார், துப்பாக்கி ஏந்தி விழுப்புரம் நகரத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…