போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரின் மீது மதுரை காவல்துறை ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை காவல்துறை ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த காலத்தில், அதிக அளவிலான போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பேசிவந்தார். இந்த விவகாரம் தொடர்பாக டேவிட்சன் ஆசிர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வராகி என்ற நபர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், வராகியின் புகார் அடிப்படையில், டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான போலி பாஸ்போர்ட் வழங்கிய குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறை ஏடிஜிபியாக பணியாற்றிவந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று காவல் தலைமையக ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருவதாகவும், இது தொடர்பாக டேவிட்சன் தேவாசீர்வாதத்திடமும் அவர்கள் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…