Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தூத்துக்குடியில் மீன்விலை கடும் உயர்வு - காரணம் தெரியுமா..?!

Saraswathi Updated:
தூத்துக்குடியில் மீன்விலை கடும் உயர்வு - காரணம் தெரியுமா..?! Representative Image.

தூத்துக்குடியில் நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாததால், மீன்களின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரிதுள்ளது. 

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த கடல் காற்று வீசிவருகிறது. இதனால், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏராளமான நாட்டுப் படகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. சொற்ப அளவிலான  நாட்டுப் படகுகள் மட்டுமே கடலுக்குச் சென்றுள்ளன. இந்நிலையில், மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப் படகுகள் இன்று கரைதிரும்பின. குறைந்த அளவிலான படகுகள் மட்டுமே கடலுக்குச் சென்று திரும்பியதால், திரேஸ்புரம்  நாட்டுப் படகு மீன்பிடி துறைமுக ஏலக்கூடத்திற்கு மீன்கள் வரத்தும் குறைவாகவே இருந்தன.  

இதன் காரணமாக, கடந்த வாரம் குறையத் தொடங்கிய மீன்களின் விலை இன்று மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, சீலா மீன் கிலோ 1200 ரூபாய் வரையும், விலாமீன் கிலோ 400 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. இதேபோல்ஊளி கிலோ 400 ரூபாய்க்கும்பாறை மீன் கிலோ 300 ரூபாய்க்கும் விற்படுவதோடுநண்டு கிலோ 250 ரூபாய்க்கும்சாலைமீன் ஒரு கூடை ரூ. 2400க்கும், கண்ணாடி பாறை கிலோ 500 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வார விடுமுறை என்பதால், விலை உயர்வையும் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்