இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோன தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டன. தற்போது கொரோனா குறைந்த நிலையில் மீண்டும் ரயில்கள் கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் இயங்கியது போல் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது.
அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீத கட்டணச் சலுகையும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்பட்டது. இந்த கட்டண சலுகையானது கொரோனா காலகட்டத்தில் திரும்ப பெறப்பட்டது, இது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் பயணக் கட்டண சலுகை வழங்கவும், ஆனால் அதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கவும் ரயில்வே வாரியம் ஆலோசித்து வந்தது. அதாவது, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டும் கட்டண சலுகை வழங்கப்படும். இதனால் மூத்த குடிமக்களுக்கான சலுகை முற்றிலுமாக நீக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஏ.சி. அல்லாத தூங்கும் வசதி மற்றும் பொதுப் பெட்டி பயணிகளுக்கு மட்டும் பயணக் கட்டண சலுகை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 70 சதவீத பயணிகளுக்கு சலுகை கிட்டிவிடும். அனைத்து ரயில்களிலும் 'பிரீமியம் தட்கல்' அதேபோல, கடைசிநேர பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்திப் பயணிக்க உதவும் 'பிரீமியம் தட்கல்' முறையை அனைத்து ரயில்களுக்கும் விரிவுபடுத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் இதுவரை பரிசீலனையில் மட்டுமே உள்ளது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…