திருச்சி முக்கொம்புவை வந்தடைந்த காவிரி நீரை, விவசாயிகள் மலர்கள் மற்றும் நெல் விதைகளை தூவி உற்சாகம் பொங்க வரவேற்றனர்.
மேட்டூர் அணையிலிருந்து இருந்து, கடந்த ஜீன் 12 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி நீரை திறந்து வைத்தார். இந்த நீரானது, கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையை கடந்து, திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வந்துள்ளது. முக்கொம்பு மேலணைக்கு தற்போது நீர்வரத்து ஆயிரத்து 900 கன அடியாக உள்ளது. அந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. முக்கொம்பு வந்தடைந்த காவிரி நீரை, பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் மலர்களையும் நெல் விதைகளையும் தூவி வரவேற்றனர். மேலும், அவர்கள் காவிரியை வாழ்த்தி முழக்கங்களையும் எழுப்பினர். ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது குறித்தும், தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்றதாகவும், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…