வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்த 48 வயதான நபர் ஒருவர் அந்த பகுதியில் வெல்டிங் வைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
மேலும் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்துள்ளது, அதனை தனது தாயாரின் பொறுப்பில் வைத்து வளர்த்து வருகிறார். 8 வது படிக்கும் அந்த 13 வயது சிறுமி தினமும் தனது தந்தைக்கு உணவு கொண்டு சென்று கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் தான் அந்த சிறுமி திடீரென கர்பமாகியிருக்கிறார் என தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பிரசவத்தில் அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, மேலும் இது குறித்து வேலூர் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில் சிறுமியின் தந்தை தான் இந்த கொடூர செயலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து பல முறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்பம் தரித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…