கோவை வனச்சரகம் ஆனைகட்டி அடுத்த தூமனூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காப்பு காட்டிற்கு வெளியே சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பெண் யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதையடுத்து, ரோந்து குழுவினர், வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர்.
இரவு நேரத்தில் வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால், இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவினர் இறந்த பெண் யானையின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்விற்கு பிறகு இறப்பிற்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், அரசு புறம்போக்கு நிலத்தில் யானை இறந்து கிடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…