வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நேற்றிரவு வானிலிருந்து சிகப்பு நிறத்தில் மர்மப் பொருள் ஒன்று கீழ் விழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் பகுதியில் நேற்றிரவு சுமார் 8 மணி அளவில் வானில் இருந்து திடீரென மர்மப் பொருள் ஒன்று கீழ் விழுந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அருகில் சென்றபோது, அந்தப் பொருளில், சிவப்பு நிற மின் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இது தொடர்பாக குடியாத்தம் போலீசாருக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் போலீசார், கீழே விழுந்துகிடந்த சிறிய அளவிலான கருவியை கைப்பற்றி, அதில் இருந்த விலாசத்திற்கு தொடர்பு கொண்டனர். அப்போது, அந்தப் பொருளானது மீனம்பாக்கத்தில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான கருவி என்பது, வானிலை ஆராய்ச்சிக்காக தொடர்ந்து அனுப்பப்படும் கருவி என்பதும் தெரியவந்தது.
மேலும், வானிலிருந்து கீழே விழுந்த இந்த கருவியால், எந்த விதமான பாதிப்பும் இல்லை எனவும், அந்த கருவியை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறும் மீனம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, குடியாத்தம் நகர போலீசார் அந்த மர்ம பொருளை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…