தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறார்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகளின் விவரங்களை சமர்ப்பிக்கும்படி, தமிழக மற்தும் புதுச்சேரி டி.ஜி.பி.க்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு மாணவன் மஞ்சள் கயிற்றை கட்டிய விவகாரத்தில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் சிதம்பரம் நகர காவல் நிலைய நட்வடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், போக்ஸோ மற்றும் சிறார் சம்பத்தப்பட்ட வழக்குகளை கையாள்வது குறித்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறாருக்கு எதிராக புலன் விசாரணை நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகள் குறித்த தெளிவான புரிதல்களை பெற வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள சிறார்களுக்கு எதிரான போக்சோ வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி.க்கும், புதுச்சேரி டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…