சென்னை, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றிவந்த மூத்த சிவில் நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற பொறுப்புப் பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தேனி மாவட்டம் உத்தமபாளையம் சப்-ஜட்ஜாக பணியாற்றிவந்த மாரியப்பன், பெரியகுளத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு முதன்மை சப்-ஜட்ஜ் அனுஷா, சங்கரன்கோவிலுக்குப் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட லஞ்ச தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி லதா, விபத்து வழக்குகளை விசாரிக்கும் சேலம் மாவட்ட நீதிமன்ற சிறப்பு நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், திருச்சி மாநகராட்சி வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவர் நசீர்அலி, திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையச் செயலாளராகவும், மேட்டுப்பாளையம் சப்-ஜட்ஜ் மோகன ரம்யா, கோவை மாவட்ட லஞ்ச தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை எழும்பூர் காசோலை மோசடி வழக்குகளை விசாரிக்கும் 26வது பெருநகர நீதிபதி சிவாஜி செல்லையா, உத்தமபாளையம் சப்-ஜட்ஜ் ஆகவும், கோவை மாவட்ட மாநகராட்சி வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவர் கெங்கராஜ், மேட்டுப்பாளையம் சப்-ஜட்ஜ் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த உசிலம்பட்டி சப் ஜட்ஜ் பிரேம் ஆனந்த், காட்பாடி சப் ஜட்ஜ்-ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…