நாகை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மனு அளிக்க வந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியபடி வெளியேறிய நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். அப்போது முற்பகல் 11.50 மணியளவில் திடீரென ஆட்சியர் அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டு புகைமூட்டம் கிளம்பியது.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அலுவலகத்தின் மூன்று தளங்களிலும் பணியாற்றிக் கொண்ருந்த அலுவலர்கள் உடனடியாக வெளியேறினர். அதிகாரிகள் மற்றும் மனு அளிக்கவந்த பொதுமக்கள் சிலர் அலறியடித்தபடி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக நாகை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…