தென்கொரியாவில் வணிக வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவின் தலைநகரான சியோலை அடுத்துள்ள பகுதியான டேஜியான் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரைத்தளத்தில் கார்களை நிறுத்தும் இடம் உள்ளது. இந்த இடத்தில் ஏற்பட்ட தீ, பலத்த காற்று வீசியதால் மற்ற தளங்களுக்கு வேகமாக பரவியது.
தீயை அணைப்பதற்கு சியோல் மற்றும் டேஜியான் நகர தீயணைப்பு படையில் போராடி வருகின்றனர். மேலும், வளாகத்தில் இருந்த பெரும்பாலானோரை தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றி காப்பாற்றினர்.
இருப்பினும், பல மணி நேரமாகப் போராட்டத்திற்குப் பிறகே தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், தீ உருவான கட்டடத்தின் தரைதளத்தில் வேலை செய்த 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து காலை நேரம் நடந்ததால், வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…