மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ரோடு ஸ்டேஷனில் மும்பை செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலின் பார்சல் வேனில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்டு ஷாலிமார்-எல்டிடி ரயில் 11.57 மணிக்கு நாசிக் சாலை ரயில் நிலையத்திலிருந்து பாதுகாப்பாக புறப்பட்டது.
இந்த சம்பவத்தால் மத்திய ரயில்வேயின் இந்த வழித்தடத்தில் சேவைகள் தடைபட்டது மற்றும் சில ரயில்களில் தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொல்கத்தாவின் ஷாலிமார் மற்றும் மும்பையின் லோக்மான்ய திலக் டெர்மினஸ் நிலையத்துக்கு இடையே ஓடும் ஷாலிமார் ரயிலின் இன்ஜினுக்கு அடுத்துள்ள பார்சல் வேனில் (கோச்) காலை 8.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக உள்ளூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், ரயில்வே ஊழியர்கள் தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்க முயன்றனர். காலை 9.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு முற்றிலும் அணைக்கப்பட்டது என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேல்நிலை கம்பியில் மின்சாரம் உடனடியாக நிறுத்தப்பட்டது, இதனால் அந்த பகுதியில் இயங்கும் மற்ற ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது என்று அதிகாரி கூறினார்.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதர் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…