Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்ப்பாடம் - ஆகஸ்ட் முதல் கற்பித்தல் பணி தொடக்கம்!

Saraswathi Updated:
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்ப்பாடம் - ஆகஸ்ட் முதல் கற்பித்தல் பணி தொடக்கம்!Representative Image.

தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் தமிழ் மொழி கற்பித்தல் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.  

தமிழக அரசு கொண்டுவந்துள்ள தமிழ் கட்டாய மொழி சட்டத்தின்கீழ் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவ-மாணவியருக்கு தமிழ்ப் பாடத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைப் போல், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ,  மற்றும் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தின் கீழ்  செயல்படும் பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக மாணவ-மாணவியருக்கு கற்பிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.

அதன்படி, மத்திய அரசின்கீழ் இயங்கிவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை மாணவர்களுக்கு கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் தமிழ் மொழி கற்பித்தல் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. தமிழக இணைய கல்விக் கழகம் எனப்படும் தமிழ்நாடு விர்ச்சுவல் அகாடமி மூலம் தமிழ் பாடங்களை வீடியோ மற்றும் ஆடியோ வடிவில் மாணவர்களுக்குக் கற்றுத்தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. 

அதுமட்டுமின்றி, தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு தமிழ் பாடப்புத்தகங்களும் வழங்கப்படவுள்ளது. மேலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கென தனியாக தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்