சென்னை தீவுத்திடலில் ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்கள் உணவு திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 14ஆம் தேதி காலை 7 மணி அளவில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உணவுத் திருவிழாவில் திரைக்கலைஞர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் இந்த உணவுத் திருவிழா நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…