பெண் காவல்துறை கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பதவி வகித்த ராஜேஸ்தாஸ், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் கூறியிருந்தார். இதனையடுத்து புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி, அவருக்குஉடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆயிரம் பக்க குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவந்தது. அனைத்து தரப்பு வாதங்கள், சாட்சியங்களிடம் விசாரணை, குறுக்கு விசாரணை என அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. ஆகியோர் ஆஜராகினர்.
இதனையடுத்து இந்த வழக்கில் நடுவர் புஷ்பராணி சிறப்பு எஸ்.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும். ரூ.20.500 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இதேபோல், முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி.,கண்ணனுக்கு ரூ500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…