Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உயிரிழந்த இளம் பெண்.. உடன்கட்டை ஏறிய இளைஞர்.. சோகத்தில் உறவினர்கள்!!

Sekar June 15, 2022 & 13:13 [IST]
உயிரிழந்த இளம் பெண்.. உடன்கட்டை ஏறிய இளைஞர்.. சோகத்தில் உறவினர்கள்!!Representative Image.

மத்திய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரின் சிதையில் விழுந்து வாலிபர் ஒருவர் உடன்கட்டை ஏறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் சாகர் பகுதியைச் சேர்ந்த ஜோதி (21) எனும் இளம் பெண், தினமும் அருகில் உள்ள கிராமத்தில் பண்ணை வேலைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த வியாழன் அன்று பண்ணை வேலைக்கு சென்ற ஜோதி வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உறவினர்கள் உதவியுடன் பெண்ணைத் தேடினர். அப்போது பண்ணை தோட்டத்தில் உள்ள கிணற்றின் இடுக்கில் ஜோதியின் துப்பட்டா கிடப்பது தெரியவந்தது. இதனால் பீதியடைந்த உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் விசாரித்த நிலையில், தீயணைப்புத் துரையின் உதவியுடன் கிணற்றில் தேடப்பட்டது.

அப்போது ஜோதி கிணற்றில் மூழ்கியிருந்த ஜோதியை தீயணைப்புத் துறையினர் பிணமாக மீட்டனர். பின்னர் பிரேத [பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் ஜோதி தெரியாமல் கால் தவறி கிணற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என கூறியதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டு சடலத்தை போலீசார் குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து ஜோதியின் சடலத்திற்கு இறுதிச் சடங்குகள் முடித்து எரிப்பதற்காக இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கிடையே ஜோதியின் மரணம் குறித்து தகவலறிந்த கரண் சிங் (21) எனும் அவரது உறவினர், 420 கிமீ தொலைவில் இருந்து மோட்டார் சைக்கிளில் நேரடியாக இடுகாட்டிற்கே அடித்து பிடித்து சென்றுள்ளார்.

அங்கு ஜோதியின் சிதை நெருப்பில் எரிவதை கண்டு கதறி அழுத அவர், யாரும் எதிர்பாராத நேரத்தில் தானும் சிதையில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கரண் சிங்கை ஒருவழியாக மீட்டு தீக்காயங்களுடன் மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து கரண் சிங்கின் சடலத்தையும் ஜோதியின் சடலத்திற்கு அருகே வைத்து எரியூட்டி உறவினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

இதனால் சந்தேகமடைந்த போலீசார் உயிரிழந்த ஜோதியை கரண் காதலித்து வந்தாரா? ஜோதியின் மரணம் தற்செயலாக நடந்ததா? அல்லது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் ஜோதி கொலை செய்யப்பட்டிருக்கலாமா எனும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்