புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு கிராமத்தை சேர்ந்த தம்பதியர் ராஜேந்திரன் - சுமதி. இவர்கள் 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் வளர்த்து வந்த ஆடு ஒன்று குட்டி ஈன்றுள்ளது. அந்த ஆட்டுக்குட்டிக்கு 1 தலை, 2 உடல்கள், 8 கால்கள், 4 காதுகளுடன் பிறந்துள்ளது. இதை கண்டு ஒருபுறம் அதிர்ச்சியடைந்த அந்த தம்பதியினருக்கு ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது. ஆனால், பிறந்த சிறிது நேரத்திலேயே அந்த ஆட்டுக்குட்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.
இந்த ஆட்டுக்குட்டியை அக்கிராம மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர். இம்மாதிரியான சம்பவம் விலங்குகளுக்கு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் அவ்வப்போது நடந்துவருகிறதை நாமும் பார்த்து வருகிறோம். இதுவும் இயற்கையின் அதிசயமே.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…