கூகுள் நிறுவனத்தின் சார்பில் குஜராத்தில் உலகளாவிய ஃபின்டெக் மையம் திறக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக கடந்த 20ம் தேதி அமெரிக்கா சென்றார். சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஐ.நாவில் நடைபெற்ற சிறப்பு யோகா அமர்வுக்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இரு நாட்டு பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி, அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் அமெரிக்க-இந்திய தொழிலதிபர்கள், பெரு நிறுவனங்களின் தலைவர்களை அதிபர் ஜோ பைடனுடன் சந்தித்தார். இந்த சந்திப்பில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சையும் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர்பிச்சை, குஜராத்தில் கூகுள் நிறுவனம் சார்பில் உலகளாவிய ஃபின்டெக் செயல்பாட்டு மையம் திறக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமர் நரேந்திரமோடியின் தொலைநோக்கு பார்வையானது, அவரது காலத்தைவிட முன்னோடியாக இருந்தது. அதை, தற்போது மற்ற நாடுகள் செய்ய விரும்பும் ஒரு வரைபடமாக நான் பார்க்கிறேன் என்றும் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…