இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்ததால் கடந்த மாதம் 13-ந் தேதி விமானம் மூலம் மாலத்தீவு சென்றார். இதனையடுத்து அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அவரது சிங்கப்பூர் விசா இன்றுடன் நிறைவடைவதால் தாய்லாந்து அரசிடம் அடைக்கலம் கோரியுள்ளார்.
இதனையடுத்து, 90 நாட்கள் தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ள தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கோத்தபய ராஜபக்சே வேறு ஒரு நாட்டில் புகலிடம் தேடிக்கொள்ள வேண்டும் என தாய்லாந்து அரசு நிபந்தனை விதித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…