Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கல்வியில் புரட்சியை ஏற்படுத்திய மோடி...ஆளுநர் புகழாரம்..!

madhankumar May 27, 2022 & 19:04 [IST]
கல்வியில் புரட்சியை ஏற்படுத்திய மோடி...ஆளுநர் புகழாரம்..!Representative Image.

கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார் என   ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மத்திய பல்கலை.யில் தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் தேசிய கல்விக் கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தொலைநோக்கு பார்வையோடு தேசிய கல்வி கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை திட்டத்தின் அடிப்படை தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துணைவேந்தர்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. கல்வி கொள்கைகள் அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் புதிய கல்விக்கொள்கையை முழுமையாக படித்து அதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார். மேலும் புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தினால் நாடு வளற்சிப்பாதையில் செல்லும் என அவர் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்