தாதாவால் பேத்தி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்லங்குப்பத்தில் வசித்து வருபவர் முதியவர் முனியாண்டி. இவருக்கு வயது 70. தன்னுடைய பேத்தியிடம் ஆசை வார்த்தை பேசி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் பேத்தி துரதிருஷ்டவசமாக கர்ப்பமடைந்துள்ளார்.
இதனனையடுத்து சிறுமியின் வயிறு திடீரென பெரிதாகிக்கொண்டே செல்வதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து உடனே அவரை அதே பகுதியில் இருக்கும் இந்திராணி என்ற பெண்ணிடம் அழைத்துச் சென்றனர். அவர் சிறுமியை பரிசோதித்து பார்த்து கர்பமாக இருப்பதாக கூறினார். இதுகுறித்து விசாரித்ததில் முனியாண்டிதான் இதற்கு காரணம் என தெரியவந்துதுள்ளது.
விஷயம் வெளியே தெரிந்தால் குடும்பத்திற்கு அசிங்கம் என நினைத்து வேறு வழியின்றி ஓய்வுபெற்ற நர்ஸ் ராஜாமணி என்பவரிடம் இளம் பெண்ணை அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர். ஏற்கனவே குழந்தை வளர்ச்சி அடைந்திருந்த நிலையில் குழந்தை இறந்து பிறந்திருக்கிறது.
குழந்தையின் சடலத்தை முனியாண்டி எடுத்து சென்று தெப்பெண்ணை ஆற்றில் புதைத்துள்ளார். ஆனால் இந்த தகவல் ஊர் முழுவதும் பரவியுள்ளது. இதுகுறித்து அந்த பகுதியை VAO அளித்த புகாரின் பேரில் குற்றவாளி முனியாண்டி, ராஜாமணி, இந்திராணி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ராஜாமணி தன் மீது வழக்குபதிவு செய்யாமல் இருக்க 23 ஆயிரத்து 500 ரூபாயை போலீசாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது. எனவே ராஜாமணி மீது வழக்கு பதிவு செய்யாமல் இருந்தனர்.
இந்த தகவல் காவல்துறை மேலிடத்திற்கு தெரியவரவே திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் இளவழகி, தலைமை காவலர் கீதாரணி, முதல்நிலை காவலர் கோகிலா ஆகியோரை ஆயுதடைப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.தாத்தாவே பேத்தியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…