தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைகுளம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராஜு. இவரது அண்ணன் வெள்ளைச்சாமி. இவர்கள் இருவருக்கும் அந்த பகுதியில் சொத்து இருந்துள்ளது அதனை வெள்ளை சாமி வேறு ஒருவருக்கு விற்றுள்ளார்.
அந்த நிலத்தை தமியான ராஜு எதற்கு வேறு ஒருவருக்கு விற்க வேண்டும் எனக்கு விற்றுவிடு என கேட்டும் வேறு ஒருவருக்கு விற்றதான் அண்ணன் தம்பி இருவருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாமரைக்குளம் கண்மாய் அருகே உள்ள இவர்களது தென்னந்தோப்பிற்கு சென்ற ராஜுஅங்கு வேலை செய்து கொண்டிருந்த வெள்ளைச்சாமி மனைவி ராமுத்தாயிடம் மோட்டார் ரூம் சாவி கேட்டு தகராறு செய்துள்ளார்.
அந்த தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த ராஜு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அண்ணியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, தலைமறைவாக இருந்த ராஜூவை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…