Kerala Latest News : கேரள மாநிலத்தில் தற்போதைய தலைமுறைகளின் மனதில் மத வெறியை வளர்ப்பதாக கேரள ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
வீடியோ வைரல்
கேரளாவில் உள்ள ஆழப்புழா என்ற பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்து கொண்ட சிறுவன் இந்து மற்றும் கிருத்துவ மதங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பகிரபட்டு வருகிறது.
உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த வீடியோ வைரலான நிலையில், கேரள உயர்நீதிமன்றம் இந்த வீடியோவிற்க்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், “மாநிலம் முழுவதும் மனதில் மதவெறி உடன் வரும் தலைமுறையை வளர்க்கிறார்கள்” என தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த பேரணியில் சிறுவனை அழைத்து வந்த நபரை காவலில் எடுத்து விசாரணை செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 2 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவலர்களை கைது செய்துள்ளனர்.
விசாரணை
கைது செய்த 2பேரிடம் நடத்திய தீவிர விசாரணையில் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் எழுப்பப்பட்ட உடனே அதை தடுத்து நிறுத்தி விட்டோம் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…