டெல்லி: கடந்த ஆண்டை போலவே இந்தாண்டிற்கான ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டிற்கான ஜுன் மாத ஜிஎஸ்டி வரிவசூல் கடந்த ஆண்டை விட 12சதவீதம் அதிகமாகும். அதாவது ஜூன் மாதத்தில் ரூ.1.61லட்சம் கோடி ஜிஎஸ்டி வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக ஜிஎஸ்டி வசூல் 1.61லட்சம் கோடியை கடந்துள்ளது.
இதேபோல் கடந்த ஜூன் மாதத்தை காட்டிலும் இந்தாண்டு இறக்குமதி பொருட்கள் மூலம் கிடைத்த வருமானம் 12சதவீதமாகவும், உள்நாட்டு பரிமாற்றங்கள் மூலம் 18சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வரியாக ரூ.9600.63கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…