Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பசுவை தேசிய விலங்கா அறிவிக்க உத்தரவிடணுமா..? உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டம்!!

Sekar October 10, 2022 & 17:14 [IST]
பசுவை தேசிய விலங்கா அறிவிக்க உத்தரவிடணுமா..? உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டம்!!Representative Image.

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. நீதிபதிகள் எஸ் கே கவுல் மற்றும் அபய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுதாரரிடம் என்ன அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகிறது என்று கேட்டது.

 மேலும் "இது நீதிமன்றத்தின் வேலையா? செலவுகளை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் ஏன் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்கிறீர்கள்? எந்த அடிப்படை உரிமை மீறப்படுகிறது? நீங்கள் நீதிமன்றத்திற்கு வருவதால் நாங்கள் சட்டத்தை காற்றில் வீச வேண்டுமா?" எனக் கேள்வி எழுப்பினர்.

பசு பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனினும் வழக்கறிஞரை நீதிபதிகள் எச்சரித்ததை அடுத்து, அவர் மனுவை வாபஸ் பெற்றார். மேலும் இந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டதாக கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னதாக பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, கோவன்ஷ் சேவா சதன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்