Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தலைக்கேறிய போதை; சொக்கபனை தீயில் விழுந்த நபர் உயிரிழப்பு! 

Kanimozhi Updated:
தலைக்கேறிய போதை; சொக்கபனை தீயில் விழுந்த நபர் உயிரிழப்பு! Representative Image.

மதுபோதையில் சொக்கப்பனைக்குள் விழுந்த நபர் பலத்த தீக்காயங்களுடன் நெல்லை மருத்துவமனையில் அனுமதி தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரம் அம்பேத்கர் காலனியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு  கடந்த ஆறாம் தேதி சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மது போதையில்  மளமளவென தீப்பற்றி எரிந்து கொண்டிந்த சொக்கப்பனைக்குள் தவறி விழுந்தார். 

இதில்  படுகாயமடைந்த அவரை  பொதுமக்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்