தகுதி உடைய நபர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை ஒன்றை சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று சமீப காலங்களில் அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. மேலும், மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தமிழ் நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம். சென்னை, செங்கல்பட்டு. கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.
மேலும் கொரோனா தொற்றானது சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பது, முக கவசம் அணியாமல் இருப்பது, இதனை கட்டுப்படுத்த தமிழக அரசின் உத்தரவின் படி தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலானோர் கொரோனாவின் தீவிரம் பற்றி அறியாமல் தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர். அவர்கள் எனவே தகுதி உடைய நபர்கள் உரிய காலத்தில் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பொது சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…