Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வண்டியில் கட்டுக்கட்டாக பணம்.. கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்!!

Sekar July 31, 2022 & 11:46 [IST]
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வண்டியில் கட்டுக்கட்டாக பணம்.. கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்!!Representative Image.

மேற்கு வங்க காவல்துறை ஒரு ரகசிய தகவலின்பேரில் ஹவுராவில் நடத்திய வாகன சோதனையில், மூன்று ஜார்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அவர்களின் காரில் கட்டுக்கட்டாக பணத்துடன் தடுத்து நிறுத்தியது.

எம்.எல்.ஏ.க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சாப் மற்றும் நமன் பிக்சல் கொங்கரி ஆகியோர் பயணித்த எஸ்யூவி தேசிய நெடுஞ்சாலை-16 இல் பஞ்ச்லா காவல் நிலையப் பகுதியில் உள்ள ராணிஹாட்டியில் மேற்குவங்க போலீசாரால் இடைமறிக்கப்பட்டது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் காரில் இருந்தனர், உள்ளே நிறைய பணம் இருந்தது. பணத்தின் அளவு காரணமாக பணம் எண்ணும் இயந்திரம் வரவழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பணம் என்னும் இயந்திரம் வந்து சேர்ந்தவுடன் முழு பணமும் எண்ணப்பட்ட பின்னரே எவ்வளவு பணம் மீட்கப்பட்டது என்பதை சொல்ல முடியும் என்று எஸ்பி ரூரல் ஹவுரா ஸ்வாதி பங்காலியா கூறினார்.

அன்சாரி ஜம்தாராவின் எம்எல்ஏவாகவும், கச்சாப் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள கிஜ்ரியின் சட்டமன்ற உறுப்பினராகவும், கொங்கரி சிம்தேகா மாவட்டத்தில் உள்ள கோலேபிராவின் எம்எல்ஏவாகவும் உள்ளனர்.

அந்த எஸ்யூவியில் எம்எல்ஏக்கள் தவிர மேலும் இருவர் இருந்ததாகவும், அதில் காங்கிரஸின் தேர்தல் சின்னத்துடன் “எம்எல்ஏ ஜம்தாரா ஜார்கண்ட்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்