தமிழகத்தில் கோவை, நீலகிரி, சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டலப்பகுதியில் நிலவும் சுழற்சியால் தமிழகத்திற்கு இன்று முதல் வரும் 6ம் தேதி மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என்றும், மழை அளவு 21 சென்டிமீட்டர் வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
இதேபோல்,சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 12 சென்டிமீட்டர் வரை இன்று மழை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், ஜூலை 5 மற்றும் 6ம் தேதிகளில் கோவை, நீலகிரி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திற்கு சூறாவளிக் காற்று வீசுவதால் வரும் 6ம் தேதிவரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…