சென்னை: தேனி மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற்றதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அதிமுக எம்.பி ரவீந்தராத் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான ரவீந்தரநாத் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து மிலானி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சில விளக்கங்களை நீதிபதி கோரியிருந்தார்.
வழக்கை மீண்டும் விசாரித்தால், மட்டுமே ஆவணங்களை சமர்பிக்க முடியும் என ரவீந்தர நாத் தரப்பு கூறியதை அடுத்து வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…