Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பகீர்.. 2 நாட்களில் 22 பேர் பலி..!!

Sekar August 21, 2022 & 23:48 [IST]
பகீர்.. 2 நாட்களில் 22 பேர் பலி..!!Representative Image.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு சம்பவங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இமாச்சலின் மண்டி, காங்க்ரா மற்றும் சம்பா மாவட்டங்களில் அதிகபட்ச சேதம் பதிவாகியுள்ளது. இதுவரை 36 வானிலை தொடர்பான சம்பவங்கள் மாநிலத்தில் இருந்து பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.

மண்டியில் மணாலி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஷோகியில் சிம்லா-சண்டிகத் நெடுஞ்சாலை உட்பட 743 சாலைகள் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே பாகி மற்றும் ஓல்ட் கடோலா பகுதிகளுக்கு இடையே மேக வெடிப்பால் பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்