India : உத்தர பிரதேசத்தில் இந்து கடவுள்கள் படம் உள்ள பேப்பரில் கறி மடித்ததாக இஸ்லாமியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சாம்பல் பகுதியை சேர்ந்த கறிக்கடை மற்றும் மெஹாக் என்னும் உணவகத்தை நடத்தி வருபவர் இஸ்லாமியர் தலிப் ஹுசைன் என்பவர் தனது கடையில் விற்கப்படும் கறியை பார்சல் செய்வதற்கு இந்து கடவுள்கள் உள்ள நாளிதழ்களை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதுதொடர்பாக இந்து கடவுள் படம் உள்ள பேப்பரில் கறி மடிக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. மேலும், அப்பகுதியில் சர்சையாக பரவியது. இது தொடர்பான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலிப் ஹுசைனை கைது செய்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…